
தற்போதுள்ள தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் நீண்ட காலங்கள் நிலைப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போய் விடுகின்றனர். ஆனால் இதற்கு மாற்றாக நடிகை நயன்தாராவும், த்ரிஷாவும் உள்ளனர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்கள். 35 வயதிற்கு மேல் ஆனாலும் கூட இவர்களுக்கான மார்க்கெட் தற்போது வரை இருந்து கொண்டு தான் உள்ளது.
மேலும் இதில் நயன்தாரா தனக்கென நிலையான மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார். ஆனால் த்ரிஷா நடிப்பில் சற்று தடுமாறி வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு படங்களும் வெற்றி பெறவில்லை. அது மட்டுமல்லாமல் நயன்தாரா தேர்வு செய்து நடிப்பது போலவே, தற்போது த்ரிஷாவும் சோலோ நாயகி போன்ற படங்களை தேர்வு செய்து நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆனாலும் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் அந்தளவு வரவேற்பை பெறுவதில்லை. தொடர்ந்து தோ ல்வி படங்களை மட்டுமே வழங்கி வந்ததால் தற்போது த்ரிஷா முன்னணி நடிகை என்ற இடத்திலிருந்து சற்று கீழே இறங்கி உள்ளார். இவருக்குப் பின் வந்த சில நடிகைகள் த்ரிஷாவின் இடத்தை பிடித்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது த்ரிஷா கைவசம் தமிழில் 4 படங்களும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் இரண்டு படங்களும் என 6 படங்கள் உள்ளன.
இந்த திரைப்படங்கள் வெளிவந்தால் மட்டுமே த்ரிஷாவின் மார்க்கெட் நிலைக்குமா? இ ல்லையா? என்பது தெரிய வரும். அது ரசிகர்களின் கையில் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது 38 வயதாகும் த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். ஆனால் நடிகை த்ரிஷா நான் திருமணம் என்று ஒன்று செய்து கொண்டால் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என அ டம் பிடித்து வருகிறாராம்.
இந்த வயதில் காதல் திருமணமா.? என அவரது குடும்பத்தினர் என்ன செய்வதென்று அறியாது திகைத்து வருகின்றனர். பல நடிகர்களுடன் இணைத்து த்ரிஷா கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது காதல் திருமணம் தான் செய்வேன் என கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அ திர்ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. இந்த வயதிற்கு மேல் காதலித்து எப்போது திருமணம் செய்து கொள்வது என ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.